Thursday 5 September 2013

அல்லாஹ்வின் நாட்டம் வேண்டும் ...!

950 ஆண்டுகள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த நூஹ் நபியினால் ----- தன்னுடைய குடும்பத்தினரை இஸ்லாத்திற்கு கொண்டு வர முடியவில்லை ....!

இறைவனின் நண்பன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இப்ராஹீம் நபியினால் ----
தனது தந்தையை இஸ்லாத்திற்கு கொண்டு வர முடியவில்லை .....!

அதிகம் சிறப்புகள் பெற்ற லூத் நபியினால் -----
தனது மனைவியை இஸ்லாத்திற்கு .கொண்டு வர முடியவில்லை .....!

அகிலத்தின் அருட்கொடை என அல்லாஹ்வினால் சிறப்பு பாராட்டைப் பெற்ற முஹம்மது நபிஸல் .அவர்களினால்------
தனது தாய், தந்தை , பெரிய தந்தை .ஆகியோர்களை இஸ்லாத்திற்கு கொண்டு வர முடியவில்லை .....!

ஆகவே ......

எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இல்லையென்றால் .... யாரும் யாரையும் நேர்வழிக்கு கொண்டு வர முடியாது ...!

தூய்மையான மார்க்கத்தை (இஸ்லாத்தை ) எடுத்துச் சொல்வது மட்டுமே நமது கடமை ..... நேர்வழிக்கு கொண்டு வருவது அல்லாஹ்வின் நாட்டம் வேண்டும் ...!

No comments:

Post a Comment