Thursday 31 October 2013

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.!

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்
என்று சாட்சி கூறுவது,

2- தொழுகையை நிலை நாட்டுவது

3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது

4- ஹஜ் செய்வது

5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் :
புகாரீ)


தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ்
சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில்
கட்டளையிட்டுள்ளான். அதில் சில
வசனங்களையும் தொழுகையைப் பற்றிய
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில்
சிலவற்றையும் தங்களின்
நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

அல்லாஹ்
நம் அனைவரையும் ஈருலகிலும்
வெற்றிபெறும் தொழுகையாளிகளாக
ஆக்கியருள்வானாக!

1- தொழுகைக் கடமை

நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத்
தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே,
என்னையே நீர் வணங்குவீராக!
என்னை நினைவு கூறும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!
(அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக
(தவறான வழியிலிருந்து விலகி சரியான
வழியில்) பிடிப்புள்ளவர்களாக
அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும்
தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும்
ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர
(வேறெதுவும்) அவர்களுக்குக்
கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான
மார்க்கமாகும்.
(அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட
"தொழுகை! தொழுகை!" என கூறிக்
கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் :
இப்னுமாஜா)

குழந்தைகள் ஏழு வயதை அடையும்
போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்!
பத்து வயதை அடைந்து விட்டால்
அடித்தாவது தொழ வையுங்கள்! என
நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் :
அபுதாவூத்)


2- போர்க்களத்திலும் தொழுகை

(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு)
நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால்,
நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும்
தொழுது கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:239)


3- உரிய நேரத்தில் தொழவேண்டும்

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில்
தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள்
மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன்
4:103)

தொழுகைகளை (குறிப்பாக)
நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்!
(தொழுகையின் போது) அல்லாஹ்வின்
முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்!
(அல்குர்ஆன் 2:238)


4- மானக்கேடை விட்டும் விலகிட
தொழுகையை நிலை நிறுத்துவீராக,

நிச்சயமாக தொழுகை (மனிதரை)
மானக்கேடானவற்றையும் தீமையையும்
விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின்
திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன்
29:45)


5- தொழுகையாளியே வெற்றியாளர்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக
வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில்
உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன்
23.1-2)

தூய்மையடைந்தவன் திட்டமாக
வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன்
இறைவனுடைய நாமத்தைத் துதித்துக்
கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
(அல்குர்ஆன் 87:14-15)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்
கொண்டும் (அல்லாஹ்விடம்)
உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக
இது உள்ளச்சம்
உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும்
பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும்,
தொழுகையுடனும் (இறைவனிடம்)
உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)


6- சுவனத்தின் வாரிசுதாரர

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க்
குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள். இத்தகையோர் தாம்
(சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள்
ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை)
அனந்தரங்கொண்டு அதில் இவர்கள்
என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன்
23:9-11)


யார் தொழுகையை பேணிக்
கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும்,
அத்தாட்சியாகவும், மறுமை நாளில்
ஈடேற்றமாகவும் இருக்கும். யார்
அதை பேணிக்கொள்ள
வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ,
அத்தாட்சியாகவோ,
ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர்
மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன்,
ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப்
ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்)
எச்சரித்தார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்:
அஹ்மத்)

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்!
பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன்
இணைந்து வாழ..

No comments:

Post a Comment