Thursday, 31 October 2013

இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.!

1- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்)
அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள்
என்று சாட்சி கூறுவது,

2- தொழுகையை நிலை நாட்டுவது

3- ரமளான் மாதம் நோன்பு நோற்பது

4- ஹஜ் செய்வது

5- ஜகாத் கொடுப்பது என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் :
புகாரீ)


தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ்
சுமார் 80 இடங்களில் அல்குர்ஆனில்
கட்டளையிட்டுள்ளான். அதில் சில
வசனங்களையும் தொழுகையைப் பற்றிய
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில்
சிலவற்றையும் தங்களின்
நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

அல்லாஹ்
நம் அனைவரையும் ஈருலகிலும்
வெற்றிபெறும் தொழுகையாளிகளாக
ஆக்கியருள்வானாக!

1- தொழுகைக் கடமை

நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத்
தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே,
என்னையே நீர் வணங்குவீராக!
என்னை நினைவு கூறும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!
(அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக
(தவறான வழியிலிருந்து விலகி சரியான
வழியில்) பிடிப்புள்ளவர்களாக
அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும்
தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும்
ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர
(வேறெதுவும்) அவர்களுக்குக்
கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான
மார்க்கமாகும்.
(அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட
"தொழுகை! தொழுகை!" என கூறிக்
கொண்டிருந்தார்கள்.
(அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் :
இப்னுமாஜா)

குழந்தைகள் ஏழு வயதை அடையும்
போது அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்!
பத்து வயதை அடைந்து விட்டால்
அடித்தாவது தொழ வையுங்கள்! என
நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் :
அபுதாவூத்)


2- போர்க்களத்திலும் தொழுகை

(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு)
நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால்,
நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும்
தொழுது கொள்ளுங்கள்!
(அல்குர்ஆன் 2:239)


3- உரிய நேரத்தில் தொழவேண்டும்

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில்
தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள்
மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன்
4:103)

தொழுகைகளை (குறிப்பாக)
நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்!
(தொழுகையின் போது) அல்லாஹ்வின்
முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்!
(அல்குர்ஆன் 2:238)


4- மானக்கேடை விட்டும் விலகிட
தொழுகையை நிலை நிறுத்துவீராக,

நிச்சயமாக தொழுகை (மனிதரை)
மானக்கேடானவற்றையும் தீமையையும்
விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின்
திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன
சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன்
29:45)


5- தொழுகையாளியே வெற்றியாளர்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக
வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில்
உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன்
23.1-2)

தூய்மையடைந்தவன் திட்டமாக
வெற்றி பெறுகிறான். மேலும், அவன் தன்
இறைவனுடைய நாமத்தைத் துதித்துக்
கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
(அல்குர்ஆன் 87:14-15)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்
கொண்டும் (அல்லாஹ்விடம்)
உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக
இது உள்ளச்சம்
உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும்
பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும்,
தொழுகையுடனும் (இறைவனிடம்)
உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்
பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 2:153)


6- சுவனத்தின் வாரிசுதாரர

மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க்
குறித்த காலத்தில் முறையோடு)
பேணுவார்கள். இத்தகையோர் தாம்
(சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள்
ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை)
அனந்தரங்கொண்டு அதில் இவர்கள்
என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன்
23:9-11)


யார் தொழுகையை பேணிக்
கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும்,
அத்தாட்சியாகவும், மறுமை நாளில்
ஈடேற்றமாகவும் இருக்கும். யார்
அதை பேணிக்கொள்ள
வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ,
அத்தாட்சியாகவோ,
ஈடேற்றமாகவோ இருக்காது. மாறாக 'அவர்
மறுமை நாளில் -காஃபிர்களாகிய- காருன்,
ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலப்
ஆகியவர்களுடன் இருப்பார்', என நபி (ஸல்)
எச்சரித்தார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்:
அஹ்மத்)

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்!
பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன்
இணைந்து வாழ..

Tuesday, 15 October 2013

What has caused you to enter HELL??


"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) 
 அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
 "அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

AL-TAKATHUR (102)

Competition in [worldly] increase diverts you.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-(1)

Until you visit the graveyards.
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (2)

No! You are going to know.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (3)

Then no! You are going to know.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (4)

No! If you only knew with knowledge of certainty...
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). (5)

You will surely see the Hellfire.
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். (6)

Then you will surely see it with the eye of certainty.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். (7)

Then you will surely be asked that Day about pleasure.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (8)